தமிழகத்தில் ஜூன் 25ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் தற்போது மின் வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 25ம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவு அடிப்படையில் அனைத்து பகுதி மின் வாரியம் சார்பாக தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் இந்த பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு வருகிறது. இதை அடுத்து வருகிற ஜூன் 25ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – CEO செயல்முறைகள்!
அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 25) அன்று சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்ததாவது, சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக வருகிற 25ம் தேதிக்கு அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, மோகநானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுக்கப்பட்டி, முத்துக்காபட்டி, புதுக்கோம்பை, பழைய பாளையம், சிவநாயக்கன்பட்டி, வல்லநாயக்கன்பட்டி, சாலை பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.