ஆகஸ்ட் 11ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் கூகலூர் மற்றும் கொளப்பலூர் துணை மின் நிலையத்தில், நாளை பரமாரிப்பு பணிகள் காரணமாக நாளை (11.08.2021) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் முன்னறிவிப்பு இன்றி மின் தடை செய்யப்பட்டது. இதனால் மின் வாரியத்தில் புகார்கள் குவிந்தன. இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் தற்போது மாவட்ட வாரியாக மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை விதிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
காமராஜர் பல்கலை இளங்கலை & முதுகலை மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதனை தொடர்ந்து மாதாந்திர மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை ஈரோடு கோபிசெட்டிபாளையம் கூகலூர் மற்றும் கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பொன்னாச்சிபுதூர், தாழைக்கொம்புதூர், பொம்மநாயக்கன்பாளையம், ஒத்தக்குதிரை, காவேரிபாளையம், செட்டியார்பாளையம், மல்ல நாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேட்டுவலவு, மணியக்காரன் புதூர், மகா லட்சுமி நகர், கருக்குப்பாளையம், பாச்சாங்காட்டுப்புதூர், நீலா கவுண்டம்பாளையம், அழகு கவுண்டம்பாளையம், ஊராட்சி கோட்டை துணை மின் நிலையம், மூன்று ரோடு ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.