தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி தபால் வாக்கு பதிவுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் தங்களின் வாக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தபால் வாக்கு பதிவு:
இந்திய தேர்தல் ஆணையம் ஆனது நடப்பு தேர்தல் விதிமுறை அறிவிப்புகளின் போது 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து தபால் வாக்கு பதிவு முறையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய அனுமதி அளித்திருந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குப்பதிவுக்கான 12D விருப்ப விண்ணப்பம் கடந்த வாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தபால் வாக்கு பதிவு முறைக்கு 4175 வயது முதிர்ந்தவர்களும், 363 மாற்று திறனாளிகளும் விண்ணப்பித்திருந்தனர்.
ஏப்ரல் எட்டாம் தேதியான இன்று முதல் சென்னையில் தபால் வாக்கெடுப்பு தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் பணியாளர்கள் 250 பேர் 65 குழுக்களாக ஒரு குழுவிற்கு நான்கு பேர் வீதம் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். இனி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தபால் வாக்கு பதிவு பணிகள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.