அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஆகஸ்ட் 21 நேர்காணல்!

1
அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு - ஆகஸ்ட் 21 நேர்காணல்!
அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு - ஆகஸ்ட் 21 நேர்காணல்!
அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஆகஸ்ட் 21 நேர்காணல்!

ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல் அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலைய அலுவலகத்தில் 21.08.2021ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தலைமை அஞ்சல் அதிகாரி அவர்கள் அறிவித்து வெளியிட்டு உள்ளார்.

ஆயுள் காப்பீடு முகவர் பணி:

தமிழகத்தில் அஞ்சல் துறை மக்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் ஏராளமானோர் வேலையிழந்துள்ள இந்த நேரத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணலை அறிவித்துள்ளது. ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு செல்ல விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் சென்னையில் வசிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு?

அதுமட்டுமின்றி வேலையில்லாதோர், சுயதொழில் செய்பவர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சங்க தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் போன்றோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விவர குறிப்பு பாஸ்போர்ட் புகைப்படம், கல்வித் தகுதிக்கான சான்றிதழ் மற்றும் முன் அனுபவ சான்றிதழுடன் நேர்காணலுக்கு வர வேண்டும் என சென்னை தலைமை அஞ்சல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!