தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு?
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு வழிகளில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்கள்:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு இன்று விடுவிப்பு!
இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாட ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல முறை முதல்வரிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால் தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 30% ஊதிய உயர்வாக ரூ.2500 மட்டுமே உயர்த்தி ரூ.10,000 தொகுப்பூதியம் ஆக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல வழிகளில் கோரிக்கை வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இருந்தும் தற்போது வரை தொகுப்பூதியத்தில் இருப்பதாகவும், அதில் பலருக்கு தற்போது 40 முதல் 50 வயதாகி விட்டதாகவும் வேறு எவ்வித பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதித்திருக்கும் நிலையில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி, நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகிய நிலையில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.