10வது படித்தவர்களுக்கு Post Office இல் வேலைவாய்ப்பு – ரூ.63000 வரை சம்பளம்! உடனே விண்ணப்பியுங்கள்!
அஞ்சலகத்தில் 10 வது படித்தவர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் படி ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
அஞ்சல் துறையில் கார் ஓட்டுநர் நிலையில் பொது மத்திய சேவை Gr.C அரசிதழ் அல்லாத, அமைச்சகம் அல்லாத பதவிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக தபால் அலுவலக வேலையை மாதம் ரூ.63,200 வரை சம்பளத்தில் பெறலாம். இப்பணிக்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி 15-03-2022 மாலை 5 மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார் டிரைவர் பணிக்கு மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hero Motors நிறுவன வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் கார் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையம் அளிக்கப்பட்டுள்ளது. 15.03.2022 தேதியின் படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இப்பணிக்கு இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வேட்பாளர் வாகனத்தில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்கக்கூடியவராக இருக்க வேண்டும் குறைந்தது மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவராகவும், ஹோம் கார்டு அல்லது சிவில் தன்னார்வத் தொண்டர்களாக மூன்று ஆண்டுகள் சேவை செய்திருப்பின் விரும்பத்தக்க தகுதியாக கருதப்படும். நேரடி நியமன முறையில் தான் டெல்லி அஞ்சல் ஊழியர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு நியமனம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் MMS டெல்லியில் பணியாளர் கார் ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பம்” என்று ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் மூத்த மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, C-121, நரைனா இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ்-I, நரைனா, புது தில்லி -110028. என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பப்பட வேண்டும்.