கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு – அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!

1
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு - அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு - அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு – அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதன் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத அரசிடம் மானியம் பெற்று இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் மானியம் பெறாத தனியார் பள்ளிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கென 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிநிரவல் நிறுத்தி வைப்பு!

தற்போது இந்த கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் (2023-24) கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வருகிற மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களை அறிய பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!