தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – ஜனவரி 3 முதல் விநியோகம்!
தமிழகத்தில் வரும் தை மாதம் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் முழுகரும்பு வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டு சில ஆண்டுகளாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்துள்ளது.
ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
எனினும் தற்போதைய முதலமைச்சர் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பு இந்த ஆண்டும் வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அந்த வகையில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், வெல்லம் உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து ஒரு துணிப்பையும் அடங்கிய 20 பொருட்கள் வழங்க உள்ளது. மேலும் இந்த தொகுப்பில் ஒரு முழு கரும்பும் வழங்கப்பட உள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ – பதிவு கட்டாயம் | ஓமைக்ரான் எதிரொலி!
இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பானது தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. மேலும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இம்முறை இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இத்தகைய பொங்கல் தொகுப்பை நியாயவிலை கடைகள் மூலம் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.