பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ – பதிவு கட்டாயம் | ஓமைக்ரான் எதிரொலி!
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனை தொடந்து மாநிலங்களுக்கு இடையிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இ – பதிவு கட்டாயம்:
தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சதமடித்த ஓமைக்ரான் தொற்று! பொதுமக்கள் அச்சம்!
மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள் – அமைச்சர் விளக்கம்!
அந்த வகையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து அவரும் அனைவருக்கும் இ- பதிவு கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.