தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல், காவலர்கள் தீவிர கண்காணிப்பு – வெறிச்சோடிய சாலைகள்!

0
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல், காவலர்கள் தீவிர கண்காணிப்பு - வெறிச்சோடிய சாலைகள்!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல், காவலர்கள் தீவிர கண்காணிப்பு - வெறிச்சோடிய சாலைகள்!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல், காவலர்கள் தீவிர கண்காணிப்பு – வெறிச்சோடிய சாலைகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நேற்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 10,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த இந்த உருமாறிய ஓமிக்ரான் தொற்று முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து இந்திய மாநிலம் கர்நாடக வந்த இருவருக்கு முதலில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த மாநிலங்களிலும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இதனால் மக்கள் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.

Post Office இல் மாதம் ரூ.2000 சேமிப்பதன் மூலம் ரூ.1.39 லட்சம் பெறலாம் – சிறந்த சேமிப்பு திட்டம்!

மேலும் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகளும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பும் தற்போது நாள் ஒன்றுக்கு 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு கடந்த 4ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. முழு ஊரடங்கில் பால், பத்திரிகை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

கடந்த 6ம் தேதி மற்றும் 16ம் தேதி ஞாயிற்று கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்தது. சுப முகூர்த்த நாள் என்பதால் அதிக அளவில் திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு நாளில் கட்டுப்பாடுகளை கண்காணிக்க சென்னையில் 10,000 காவலர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!