பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணம் எடுக்கும் வசதி!
வாடிக்கையாளர்கள் டோர் ஸ்டெப் வங்கி மூலம் பணம் எடுக்கலாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அறிவித்துள்ளது. இதற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டோர் ஸ்டெப் வங்கி:
இந்த கொரோனா காலத்தில் வங்கி அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக உள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்துகிறது. ஆனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் கூடுகின்றனர். இதை தடுக்க பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலுக்கே வந்து வங்கி சேவைகளை வழங்குகிறது. டோர்ஸ்டெப் பேங்கிங் கோரிக்கைய இப்போதே பதிவு செய்து வீட்டிலிருந்தே வங்கி சேவைகளை பெறலாம். மேலும் கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் பணத்தை எடுக்கலாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய் நிதி உதவி – மத்திய அரசு அறிவிப்பு!!
மேலும் வாடிக்கையாளர்களின் டோர்ஸ்டெப் பேங்கிங் கட்டணத்தை 50% குறைத்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எஸ்பிஐ, யூனியன் பேங்க் ,கனரா வங்கி, மத்திய வங்கி, இந்தியன் வங்கிபோன்ற வங்கிகளும் டோர்ஸ்டெப் வங்கி சேவைகளை வழங்குகின்றன. இதற்கு வங்கி கணக்கு எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும், அல்லது தனது வங்கி டெபிட் கார்டையும் பயன்படுத்தலாம். மைக்ரோ ஏடிஎம் மூலம் சேவை வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
குறைந்தபட்சம் 1000 அதிகபட்சமாக 10,000 வரை பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என வங்கிகள் தெரிவித்துள்ளது. மேலும் டோர் ஸ்டெப் வங்கி மூலம் நிதி அல்லாத சேவைகளும் வழங்கப்படுகிறது. புதிய காசோலை புத்தக கோரிக்கை, நிலையான வழிமுறைகள் கோரிக்கை, கணக்கு அறிக்கை, டி.டி.எஸ் & படிவம் 16 சான்றிதழ் வழங்கல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. http://www.psbdsb.i என்ற இணையதளத்திற்கு சென்று அதற்கான வழிமுறைகளை கடைபிடித்து வீட்டிலிருந்தே வங்கி சேவைகளை பெறலாம்.