PM கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவித்தொகை உயர்வு – அமைச்சர் தகவல்!

0
PM கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவித்தொகை உயர்வு

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சர் அவை பதிலளித்துள்ளது.

கிசான் உதவித்தொகை:

இந்தியாவில் சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தேவையான மானிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு முதல் பி எம் கிசான் உதவித்தொகை திட்டத்தை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 6000 தொகையானது மூன்று தவணைகளில் 2000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் மொத்தம் 15 தவணைகளுக்கான உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையின் மூலமாக 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூபாய் 2.8 ஒரு லட்சம் கோடி பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பி எம்  கிசான் உதவித் தொகையை ரூபாய் 8000 முதல் ரூபாய் 12000 வரை உயர்த்துவதற்கான திட்டங்கள் எதுவும் உள்ளதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தை உயர்த்தும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று அமைச்சரவை பதிலளித்துள்ளது. பி எம் கிசான்  விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகளை சரி பார்ப்பது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!