தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி? விரைவில் அறிவிப்பு!

1
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி? விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி? விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி? விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 14ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மதுபான கடைகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. இதனால் ஊரடங்கில் அமலில் உள்ள தளர்வுகள் அனைத்தும் ஜூன் 7 முதல் 14 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி மாலை 5 மணிவரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை நிலவரம்!!

இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஜூன் 14 க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அவ்வாறு நீட்டிக்கப்படும் ஊரடங்கில் சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டு உள்ள வருமான இழப்பை சரி செய்யும் நோக்கில் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்திலும் திறக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் அண்டை மாநிலங்கள் சென்று மது வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் முறைகேடுகளும் நடைபெற்றது. தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில், மதுக்கடைகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. மக்களை அழிக்க வேன்டாம் எத்தனை குடும்பம் பாதிக்கப்படுகிறது எத்தனை குடும்பம் நடு தெருவில் வந்து போராடுகிறார்கள் மதுபானம் மூலம் எவ்வளவோ கொலை, கற்பழிப்பு,தற்கொலை,விபத்து,குடும்பத்தில் பிரச்சனை நடைபெறுகிறது ஒரு குடும்பத்தை அழித்து சாபமான
    பனம் அரசாங்கத்துக்கு வேன்டாம்
    இதற்கு எல்லாம் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து வரும் போது கனக்கு slula வேன்டும் ஏழை ஜனங்களை பாருங்க மதுபானம் வேன்டாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!