தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு..மீண்டும் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கெடுபிடி – அமைச்சர் கோரிக்கை!

0
தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு..மீண்டும் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கெடுபிடி - அமைச்சர் கோரிக்கை!
தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு..மீண்டும் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கெடுபிடி - அமைச்சர் கோரிக்கை!
தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு..மீண்டும் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கெடுபிடி – அமைச்சர் கோரிக்கை!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா

நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. மேலும் மற்றொரு புறம் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலும் அதிகமாக பரவி கொண்டு வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் அமலுக்கு வரும் புதிய சட்டம் – மருந்து உற்பத்தியை மத்திய அரசே ஒழுங்குபடுத்தும்! வெளியான அப்டேட்!

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருச்சியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இவருக்கு இணை நோய்கள் இருந்ததா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இவர் கூறியதாவது, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!