2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பணிநீக்கம் என்பது தொடர்கதையாகி இருக்கிறது. அந்த வகையில் முன்னணி நிறுவனம் தற்போது பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணிநீக்கம் அறிவிப்பு
உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு அப்படி பல ஊழியர்கள் வேலை பறிபோனது. அது 2024 ஆம் ஆண்டில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் தொடர்கதையாக இருக்கிறது. தற்போது அந்த வரிசையில் ஒரு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான PayPal இணைந்துள்ளது.
TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே படித்து பாஸ் பண்ண – இதை பாலோ பண்ணுங்க!
இந்த நிறுவனம் 2023 ஆம் ஆண்டு 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது, 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ அலெக்ஸ் க்றிஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், பணிநீக்கம் செய்யப்படுவோருக்கு இந்த வார இறுதிக்குள் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.