18 ஆண்டுகள் பேசாத பெண்ணை பேச வைத்த AI தொழில்நுட்பம் – அறிவியலாளர்கள் சாதனை!
மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகள் பேசாத பெண்ணை AI தொழில்நுட்பத்தின் மூலமாக அறிவியலாளர்கள் பேச வைத்து சாதனை படைத்துள்ளனர்.
AI தொழில்நுட்பம்:
உலகம் முழுவதும் தற்போது AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. அதாவது, மனித தேவைகளை குறைக்கும் வகையில் AI தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன.
Join Our WhatsApp Group” for Latest Updates
அந்த வகையில், தற்போது ஸ்டோக்கால் கடந்த 18 வருடங்களாக 47 வயது நிரம்பிய பெண் ஒருவர் பேசும் சக்தி இழந்து அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது AI தொழில்நுட்பத்தின் மூலமாக அந்தப் பெண்ணை பேச வைத்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு ஷாக் அப்டேட்.. பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது? – ஹரியானா அரசு விளக்கம்!
அதாவது, மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் தவித்து வந்த பெண்ணின் மூளை அனுப்பும் சிக்னல்களை உள்வாங்கி AI தொழில்நுட்பத்தின் மூலமாக அந்தப் பெண்ணை பேச வைத்து சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், இந்த AI தொழில்நுட்பத்தின் மூலமாக மருத்துவத்தில் கூடுதல் சிகிச்சைகள் வழங்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.