![கயலை பற்றி கவலைப்படும் மீனா, கதிர் சொன்னதை கேட்காததால் கயலை பற்றி கவலைப்படும் மீனா, கதிர் சொன்னதை கேட்காததால் வருத்தத்தில் முல்லை - இன்றைய](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/10/கயலை-பற்றி-கவலைப்படும்-மீனா-கதிர்-சொன்னதை-கேட்காததால்.jpg)
கயலை பற்றி கவலைப்படும் மீனா, கதிர் சொன்னதை கேட்காததால் வருத்தத்தில் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி ஜீவாவிடம் கயல் பற்றி பேசுகிறார். வேறு ஒருவர் கடை பக்கத்தில் இருக்கும் இடத்தை வாடகைக்கு கேட்டு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரிடம் வங்கி ஊழியர் ஒருவர் வந்து ஏடிஎம் வைக்க வேண்டும் என சொல்ல, முல்லை எல்லாம் என்னால் தான் என சொல்கிறார். உடனே கதிர் அந்த அக்கா வேலைக்கு வந்ததால் தான் என சொல்லி கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் கடையில் ஜீவா மூர்த்தி இருக்க, ஜீவா வீட்டிற்கு சென்று ரொம்ப நேரம் ஆகிவிட்டது என சொல்கிறார். ஆமாம் கயல் பாப்பா பிடித்து வைத்து கொண்டால் அவளை கொஞ்சியதில் நேரம் போனதே தெரியவில்லை என சொல்கிறார்.
அந்த நேரம் பார்த்து ஒருவர் வர கடையை வாடகைக்கு வேண்டும் என சொல்கிறார். மூர்த்தி கடை வேலை முடிந்ததும் பேசிக்கலாம் என சொல்லி அனுப்பிவிடுகிறார். பின் மீனா வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்ய தலை வலிப்பதாக சொல்லி படுக்க செல்கிறார். தனம் நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி கொடுத்துவிட கஸ்தூரி மற்றும் தனத்தின் அம்மா கோபப்படுகிறார். தனம் கயலை குளிக்க ஊத்தி வைக்க, தனத்தின் பையன் அழுகிறான்.
உடனே தனம் பால் கொடுக்க செல்ல கஸ்தூரி மற்றும் தனத்தின் அம்மா கயலை அப்படியே விட்டு கிளம்புகின்றனர். கயல் அழுது கொண்டிருக்க மீனா வந்து தூக்கி வைக்கிறார். பின் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, மூர்த்தியிடம் கதிர் ஏடிஎம் பற்றி பேசுகிறார். நான் சரி என சொல்லிவிட்டேன் என சொல்ல, மூர்த்தி ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் என சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் அவரிடம் வேண்டாம் என சொல்லிவிடு என சொல்ல சொல்கிறார்.
விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – ரோஷினிக்கு பதிலாக புது நடிகையுடன் விரைவில் தொடக்கம்!
உடனே முல்லை இவர் எடுத்த முடிவு சரியாக இருக்காது என ஏன் நினைக்கிறார்கள் என வருத்தப்பட, மீனா கயலை யாரும் பார்க்கவில்லை என சொல்லி வருத்தப்படுகிறார். பின் தனத்தை மூர்த்தி ரெஸ்ட் எடுக்க சொல்ல, நான் எந்த வேலையும் செய்யவில்லை, மீனா முல்லை தான் வீட்டை பார்த்துக் கொள்கிறார்கள். என சொல்ல, கயல் பிறந்த நாள் வருகிறது என தனம் சொல்கிறார். தனம் பிறந்தநாளைக்கு நகை வாங்கி போட வேண்டும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.