கண்ணனை அடித்து ரத்தம் சொட்ட கீழே தள்ளிய அடியாட்கள் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கடை பையனை கதிர் அடித்ததால் கண்ணனை ஆள் வைத்து மோசமாக அடிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் அம்மா நெஞ்சு வலிப்பது போல நடித்து தனத்தை வர வைக்க நினைக்கிறார். ஜெகா மருத்துவமனைக்கு கூப்பிட முடியாது எனவும் தனம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என தனத்தின் அம்மா சொல்ல, ஜெகா சென்று மூர்த்தியிடம் பேசுகிறார். மூர்த்தி முடியாது என சொல்ல, ஜெகா நிலைமையை புரிய வைக்க மூர்த்தி சரி என சொல்கிறார். பின் ஜெகா தனத்தை பார்க்க செல்ல, அம்மாவிற்கு நெஞ்சுவலி என சொல்கிறார். தனம் என்ன நடந்தது என கேட்க , அவர் நான் வந்து பார்க்கிறேன் என சொல்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை & கண்ணன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
அப்போது ஜெகா வந்து நீ 2 3 நாட்கள் இருக்க வேண்டும் என அம்மா நினைப்பதாக சொல்கிறார் , மூர்த்தி ஆமாம் தனம் நீ சென்று வா என சொல்ல தனமும் சரி என கிளம்புகிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஜனார்த்தனன் கடையில் பணத்தை திருடியவனை கதிர் அடித்ததால் அவன் உன்னை சும்மா விடமாட்டேன் என சொல்கிறான். அவன் அடியாட்கள் அழைத்து கொண்டு கண்ணன் தனியாக நடந்து வருவதை நோட்டமிடுகிறார்.
பின் கண்ணனை பிடித்து அனைவரும் அடிக்கின்றனர். கண்ணன் யார் நீங்க எல்லாம் என தெரியாமல் இருக்க, அடியாட்கள் கண்ணனை பயங்கரமாக அடிக்கின்றனர். அதனால் கண்ணன் ரத்த வெள்ளத்தில் கிழே விழுகிறார். இந்நிலையில் கண்ணன் காப்பாற்றப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் தனம் ஊருக்கு போன நேரம் பார்த்து இப்படி நடந்ததால் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையே சாதகமாக பயன்படுத்தி கண்ணனை வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர் .