‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்காக ரவுடிகளிடம் அடிவாங்கி ரத்தம் சிந்திய கண்ணன் – ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் நடந்த காட்சிகளின் கிளிப்பிங்குகளை நடிகர் சரவண விக்ரம் தனது யூடுயூப் தலத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது புது மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் மூர்த்தியின் வீட்டிற்கே வந்துள்ளதால் பல கலாட்டாக்கள் நடக்கிறது. கண்ணன் வீட்டில் இருந்து தனியாக இருந்தால் தான் அவனுக்கு பிரச்சனை. அதனால் கண்ணனும், ஐஸ்வர்யாவும் இனி நம்ம வீட்டில் தான் இருப்பார்கள் என்று தனம் முடிவெடுத்து அவர்களை வீட்டிற்கு அழைத்து வருகிறார். புது மருமகளாக வரும் ஐஷு தனது விருப்பத்தின் படி நடந்து கொள்கிறார். இதனால் மீனா ஐஷுவை பார்த்து பொறாமைபடுகிறார்.
சன் டிவி ‘கயல்’ சீரியலில் நடிக்கும் நடிகை சைத்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் ஐஷு அனைவரிடமும் பாசமாக நடந்து கொள்கிறார். அவ்வப்போது விளையாட்டுத் தனமாக சிறு சிறு வம்புகளையும் செய்து வருகிறார். வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்து, அனைவரையும் அசத்துகிறார். இதனால் கண்ணன் மற்றும் ஐஷு இருவருக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காட்சிகள் வருகிறது. இந்நிலையில் சரவண விக்ரம் தற்போது தனது யூடுயூப் சேனலில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த ஷூட்டிங் வீடியோக்கள் இருந்தது.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலியுடன் மீண்டும் இணைந்த அகிலன் – வெளியான வீடியோ!
அதில் மீனா அப்பா கடையில் பணத்தை திருடிய பையன், ரவுடிகளை கூட்டி வந்து கண்ணனை அடிக்கும் காட்சிகள் இருந்தது. சீரியல் ஷூட்டிங்கிற்காக டூப் போட்டிருப்பார்கள் அல்லது அடிப்பது போல் நடிப்பார்கள் என்று பார்த்தால், உண்மையாகவே கண்ணனை 3 பேர் சேர்ந்து அடித்து துவைத்து விடுகிறார்கள். அடித்த பிறகு, கேட் சொன்னதும் கண்ணனிடம் நன்றாக இருக்கிறாரா என்று பார்த்து மன்னிப்பு கேட்கிறார்கள். சீரியல் ஷூட்டிங்கிற்காக உண்மையாகவே அடிவாங்கிய கண்ணனின் கடமை உணர்ச்சியை நினைத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.