கண்ணனை பற்றி பெருமையாக பேசும் தனம், குழந்தையை கொஞ்சும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

0
கண்ணனை பற்றி பெருமையாக பேசும் தனம், குழந்தையை கொஞ்சும் குடும்பத்தினர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
கண்ணனை பற்றி பெருமையாக பேசும் தனம், குழந்தையை கொஞ்சும் குடும்பத்தினர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
கண்ணனை பற்றி பெருமையாக பேசும் தனம், குழந்தையை கொஞ்சும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், வீட்டின் புதுவரவை நினைத்து அனைவரும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் தனம், கண்ணனை பற்றி பெருமையாக பேசுவது போல புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஒவ்வொரு நாள் எபிசோடுகளிலும் ஆனந்தம் கொண்டாடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சமீபகாலமாக சிறிது சறுக்கலை சந்தித்து வந்தது. அதாவது கண்ணனின் திருமணத்திற்கு பிறகு ரெண்டுபட்ட குடும்பம் இனி எப்போது ஒன்று சேரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இதற்கிடையில் லட்சுமி அம்மாவின் மரணத்தினால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பமே சோகத்தில் திளைத்திருந்தது. இந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தற்போது பல நல்ல விஷயங்கள் நடந்தேறுகிறது.

பாக்கியாவிற்கு மீண்டும் சமையல் ஆர்டர் கொடுக்கும் தொழிலதிபர்? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் செம ட்விஸ்ட்!

அந்த வகையில் மூர்த்தியின் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு குடி வந்திருக்கும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் ஒன்றிணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமாக தனத்துக்கு பிரசவ வலி வரும்போது அருகில் யாரும் இல்லாத சமயத்தில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா அவருக்கு உதவுவது போல கடந்த வார எபிசோடுகள் ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து இந்த வாரத்துக்கான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

அதில் தனத்துக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை நினைத்து குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் தனத்தின் குழந்தையை பார்க்காமலேயே கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகின்றனர். மறு பக்கத்தில் கண்ணனை தேடும் தனத்திடம் அவர் சென்று விட்டதாக கதிர் கூறுகிறார். பிறகு கண்ணன் தனக்கு செய்த உதவியை மூர்த்தியிடம் கூறி தனம் பெருமைப்படுகிறார்.

சன் டிவி ‘வானத்தை போல’ முதல் ‘மகராசி’ வரை இந்த வார TRP ரேட்டிங் – ‘பாரதி கண்ணம்மா’வுக்கு எந்த இடம் தெரியுமா?

இப்போது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் தனத்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். அப்போது எதிர் வீட்டு வாசலில் நின்று நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணனுக்கு, குழந்தையை காட்ட விரும்பும் தனம் அதன் முகத்தில் இருந்த துணியை விலக்குகிறார். அந்த குழந்தையின் முகத்தை பார்த்து கண்ணன் சந்தோஷப்படும் சில காட்சிகள் புதிய ப்ரோமோவில் இடம்பிடித்துள்ளது. இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குளாக்கி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!