கண்ணனால் உயிருக்கு போராடும் லட்சுமி, பதட்டத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் காட்சிகள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்:
விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், மக்கள் பலரும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால் அது, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தான். அதில் கூட்டு குடும்ப வாழ்க்கையினை அழகாக மக்களை ஈர்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இந்த சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனியாக வீடு எடுத்து தங்குகின்றனர்.
விஜய் டிவியில் மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை தீபா, சங்கர் – ரசிகர்கள் பாராட்டு!
இவர்களை மூர்த்தி வீட்டை விட்டு விரட்டி விட்டாலும், கதிர் மற்றும் ஜீவா இருவராலும் கண்ணனை விட்டு கொடுக்க முடியவில்லை. இதனால் அவருக்கு வேண்டியவைகளை அவருக்கு தெரியாமல் செய்கின்றனர். இதனை அறியும் கண்ணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். இது ஒரு புறம் இருக்க, கண்ணன் திருமணம் செய்து கொண்டதால் வீட்டினர் அனைவரும் சோகமாக இருக்கின்றனர். இருந்தாலும், தனத்தின் பிரசவத்தை நினைத்து சற்று நிம்மதி அடைகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அவரது பிரசவம் மற்றும் குழந்தை பிறப்பினை தெரிந்து கொள்ளும் அவரது மாமியார் லக்ஷ்மியும் பழையபடி அனைவரிடமும் பேசுகிறார். இப்படி அனைவரும் சற்று நிம்மதியுடன் இருக்கின்றனர். இந்த சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் கண்ணனின் அம்மா மிகவும் சீரியஸ் ஆகுகிறார். கண்ணனை நினைத்து ஒரு விதத்தில் கஷ்டப்படும் லட்சுமி அவரை நினைத்து புலம்பி மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் பதறி விடுகின்றனர். அடுத்து வரும் எபிசோட் இனி பரபரப்பான காட்சிகளுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.