ஜீவா செய்த காரியத்தால் கண்கலங்கும் மீனா – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் இன்று ஜனார்த்தனன் ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்காக சண்டை போட்டதனை நினைத்து நெகிழ்ச்சி அடைகிறார். மீனா தனது அப்பாவிற்காக ஜீவா செய்த காரியத்தை நினைத்து கண்கலங்குகிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று ஜீவா, மூர்த்தி மற்றும் கதிர் மூவரும் ஜனார்த்தனனிடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இனி எந்த பிரச்சனை வந்தாலும் அதனை தங்களிடம் தெரிவிக்குமாறும் கூறுகிறார். பின், பக்கத்து கடைக்காரர் பிரச்சனையை பேசி தீர்த்து வைக்கிறார். இதனால் மீனா குடும்பத்தினர் மிகுந்த சந்தோசம் அடைந்து விடுகின்றனர். இனி அவர் பிரச்சனை செய்வது போல இருந்தால் அதனை தன்னிடம் தெரிவிக்குமாறு மூர்த்தி கூறுகிறார்.
தமிழ் பல்கலையில் ரூ.2000 உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு – அறிவிப்பு வெளியீடு!
பின், கதிர் தனது வீட்டிற்கு செல்கிறார். அப்போது தனம் மற்றும் முல்லை இருவரும் நடந்ததை பற்றி கேட்கின்றனர். நடந்ததை கதிர் கூறியதும், தனம் மற்றும் முல்லை இருவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். ஜீவா எதற்காக சண்டை போட்டார் என்றும், இதனால் வேறு பிரச்சனை வந்து விடுமோ என்று பயப்படுகின்றனர். பின், கதிர் அவர்களை சமாதானம் செய்கிறார். பின், ஜனார்த்தனன் மூர்த்தி வீட்டினர் தனக்காக பேசியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
TN Job “FB Group” Join Now
அதனை மீனா மற்றும் அவரது மனைவியிடம் பெருமையாக கூறுகிறார். இதனால் மீனாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. மீனாவை வீட்டிற்கு அழைத்து செல்ல ஜீவா வருகிறார். பின், இருவரும் வீட்டிற்கு போகும் வழியில் மீனா அமைதியாக வருகிறார். இதனால் குழப்பம் அடையும் ஜீவா வண்டியை நிறுத்தி விட்டு என்னவென்று கேட்கிறார். அதற்கு மீனா சட்டென்று அழுது விடுகிறார். இதனால் ஜீவா பதறி விடுகிறார். ஜீவா தனது தந்தைக்காக இப்படி செய்வார் என்று தான் நினைக்கவில்லை என்றும், இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறுகிறார். பின், ஜீவா அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது. மேலும் நாளை தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!