பாக்கியாவும், ராதிகாவும் வாழ்க்கையில் எடுக்க போகும் பெரிய முடிவு – “பாக்கியலட்சுமி” யில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியை விவாகரத்து செய்ததால் இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என கோபி பேசுகிறார். மறுபக்கம் பாக்கியா வீட்டிற்கு வந்து எதுவும் பேசாமல் இருக்க, குடும்பத்தில் அனைவரும் பாக்கியா தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என கெஞ்சுகிறார்கள்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வெளியே தெரிந்துள்ள நிலையில், பாக்கியா கோபியை பிரிய முடிவு செய்கிறார். அதனால் எழிலுடன் சேர்ந்து கோர்ட்டிற்கு சென்று கோபியை பேச விடாமல் விவாகரத்து கேட்க நீதிபதி பாக்கியா பக்கம் உள்ள நியாயத்தை பார்த்து விவாகரத்து கொடுக்கிறார். இந்நிலையில் கோபி பாக்கியா மீது பயங்கர கோவத்தில் இருக்க இனிமேல் வீட்டிற்கு வர கூடாது என சொல்கிறார். ஆனால் பாக்கியா அதற்கு எதுக்குமே பதில் பேசாமல் இருக்கிறார்.
TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!!!!
இந்நிலையில் எழில் உடன் ஹோட்டல் சென்றுவிட்டு பாக்கியா வீட்டிற்கு போக வேண்டும் என சொல்ல எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அவர் எதற்காக வீட்டிற்கு போக வேண்டும் என சொன்னார் என்பது தெரியாமல் இருக்க, வீட்டின் வாசலில் கோபி பாக்கியாவை உள்ளே போகவிடாமல் தடுத்து நிறுத்துகிறார். இனியா அம்மா இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் தயவு செய்து நீ வீட்டில் இருக்க வேண்டும் என கெஞ்சுகிறார். பதிலுக்கு செழியன் ஜெனி என அனைவரும் கெஞ்சுகின்றனர்.
கடை திறப்பு விழாவில் குடும்பத்தை எதிர்பார்க்கும் கதிர், போகாமல் இருக்கும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!
மறுபக்கம் ஈஸ்வரி பாக்கியாவின் இந்த முடிவை குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். ஆனால் பாக்கியா இதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். மறுபக்கம் பாக்கியா மற்றும் கோபிக்கு விவாகரத்து நடந்ததால் இனி எந்த பிரச்சனையும் இல்லை என ராதிகா, கோபியை ஏற்றுக் கொள்ள இருக்கிறார். இனி வரும் எபிசோடுகளில் கதையில் பெரிய திருப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.