பத்ம விருதுகள் வழங்கும் விழா – தமிழகத்தை சேர்ந்த எஸ்.பி.பி, சாலமன் பாப்பையாவிற்கு கவுரவம்!
இந்தியாவில் சாதனை படைத்தவர்களுக்கான பத்ம விருதுகள் தமிழகத்தை சேர்ந்த எஸ்.பி.பி, சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று வழங்கப்பட்டது.
பத்ம விருதுகள்:
இந்தியாவில் குறிப்பிட்ட சில துறைகளில் பெரிய சாதனை புரிபவர்களுக்கு இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது பாரத ரத்னா விருது தான்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் ஈடு செய்யப்படும் – பள்ளிக் கல்வித்துறை தகவல்!
அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை ஆகும். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதி மாளிகையில் விழா நடத்தப்பட்டு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது இன்று டில்லியில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த பலருக்கு இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்திற்கான தேசிய மற்றும் சர்வதேச விடுமுறைகளின் பட்டியல் – முழு விவரம் இதோ!
இன்று எஸ்.பி பாலசுப்ரமணியம் சார்பில் அவரின் குடும்பத்தார்கள் அந்த உயரிய விருதை பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் இதே போன்று தமிழகம் சார்பில் திரைப்பட பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் சமூக சேவகி கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.