தமிழக அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சப்ளை – போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆலோசனை!!
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் கொரோனா அவசர தேவைகளுக்காக ஆக்சிஜன் சப்ளை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் ஆக்சிஜன்:
தமிழகத்தில் புதிய போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ராஜகண்ணப்பன் அவர்களின் முதல் ஆய்வு கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. அதில் போக்குவரத்துத்துறை மண்டல மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், சாலை போக்குவரத்து நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அனைவர்க்கும் வீடு திட்டம் மானியம் வழங்கல் – அமைச்சர் அன்பரசன் அறிவிப்பு!!
அந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து துறையின் செலவீனங்களை குறைத்து, வருவாய் அதிகரித்தல், சுகாதார வழிமுறைகளை பேருந்துகளில் சீராக கடைபிடித்தல், 14வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் ‘நிர்பயா’ திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல், கிராம புறங்களில் பேருந்து தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பேருந்து இயக்கம் போன்றவை தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
மேலும் தற்போது அமலுக்கு வந்த பெண்களுக்கான இலவச பேருந்து கட்டணம் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்பயா திட்டத்தின் மூலம் அனைத்து பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், பேருந்து வழிதடங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ளும் “சலோ ஆப்” குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
![ssc](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/05/ssc-nafisha.jpg)
கொரோனா காலத்தில் படுக்கை வசதிகள் தேவைப்பட்டால் பேருந்துகளை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பேருந்துகளில் ஆக்சிஜன் சப்ளை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்