8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு நடவடிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் அங்குள்ள 5,947 பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் சில அரசுகள் சார்பில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.499க்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு துவக்கம் – மலிவு விலையில் தயாரிப்பு!
ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் அங்குள்ள 5,947 மேல்நிலை பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் மொத்தம் 19,997 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், அங்கு 8 முதல் 12 ஆம் வகுப்புகளில் 45,07,445 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும் அதில் 19,997 பள்ளிகளில் கிராமப்புறங்களில் மட்டும் 5,947 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நேற்று முதல் நாளில் மொத்தம் 4,16,599 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.