தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன் படி இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரம் மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் வருமானம் இழந்து தவித்தனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த நிவாரணத் தொகை இரண்டு தவணையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி மே மாதம் முதல் தவணை வழங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ரேஷன் கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு – ஆசிரியர்கள் பரிந்துரைகளை பெற திட்டம்!!
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் படி ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வழங்கல் துறையில் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ஆர். ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்படும். 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட உள்ளது. இந்த இரண்டிற்கான டோக்கன்களும் வரும் 11ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்படும். பின் டோக்கன்கள் வரிசை படி பொருட்களும், தொகையும் ஜூன் 15ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என உணவு வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.