Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – டிஜிட்டல் மாத தொகை!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க உதவும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் மேலும் சில தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்தது. அதனால் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வந்தனர். இதன் காரணமாக தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் சேமிக்க தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடுகளை செலுத்தத் தொடங்கினர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அதிகமான வட்டி தொகை கிடைக்கிறது. அத்துடன் இத்திட்டங்களில் கணக்கை தொடங்க குறைந்தபட்ச தொகையாக ரூ.100 இருந்தால் கூட சேமிப்பு கணக்கை தொடங்க முடிகிறது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை திட்டம்!
அதனால் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்கள் கூட இத்திட்டங்களில் இணைய முடிகிறது. தற்போது பெண் குழந்தைகளுக்காக சேமிக்க உதவும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) என்ற திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயது நிரம்பிய குழந்தைகள் வரை சேமிப்பு கணக்கை அவர்கள் பெற்றோர் பெயரில் தொடங்க முடியும். அத்துடன் இத்திட்டம் மூலமாக பெண் குழந்தைகளின் எதிர்கால செலவினங்களுக்கு ஒரு பெரிய தொகையை சேமிக்க முடிகிறது. தற்போது இத்திட்டத்தில் டிஜிட்டல் முறையில் மாத தொகையை செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முதலாவதாக டிஜிட்டல் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும்.
தற்போது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் டிஜிட்டல் முறையில் மாத தொகையை செலுத்துவதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
1. முதலாவதாக IPPB மொபைல் பேங்கிங் செயலியைத் திறந்து 4 இலக்க MPINஐ உள்ளிட்டு சேமிப்பு கணக்குள் நுழைய வேண்டும்.
2. அடுத்ததாக ‘DOP சேவைகள்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் ‘சுகன்யா சம்ரிதி கணக்கு’ என்ற சேமிப்பு திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. இதையடுத்து SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிட வேண்டும். அடுத்ததாக வைப்புத் தொகையை உள்ளிட்டு ‘பணம்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. தற்போது செலுத்த வேண்டிய தொகையை உள்ளிட்டு ‘உறுதிப்படுத்து’ என்னும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
5. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட்டு ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. இறுதியாக மாத தொகையை செலுத்தியதற்கான வெற்றிகரமான செய்தியை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறுவீர்கள்.