தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஆசிரியர்கள் வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஒமிக்ரான் பரவல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் தமிழகத்திலும் கண்டறியப்பட்டது. அத்துடன் தற்போது நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
Post Office இல் மாதம் ரூ.1500 முதலீட்டில் 1 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டங்கள்!
அதனால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடத்த கூடாது என்றும் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு நேரடி வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை என்று அறிவித்துள்ளது.
Pongal Special – மண்பானையில் சுவையான பொங்கல் செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி இதோ!
இவ்வாறு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு விடுமுறை என்பது பெற்றோர்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் கற்றல் பயிற்சி குறித்த கூட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியர்களுக்கு திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு நடந்தது போல ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.