TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்!

0
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் - ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான TCS தற்போது BCA மற்றும் B.Sc பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

வேலை வாய்ப்புகள்

நாடு முழுவதும் தற்போது கொரோனா 2ம் அலை பரவல் தொற்று குறைந்திருக்க கூடிய சூழலில் அனைத்து வகையான அரசு மற்றும் தனியார் துறைகளும் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனமாக திகழும் டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் (TCS) தொடர்ச்சியாக புதிய வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதாவது அடுத்த நிதியாண்டுக்குள் TCS, இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 1 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் கவனத்திற்கு – அரசு வழங்கும் உதவித்தொகை! பெறுவது எப்படி?

இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக தான் தற்போது புதிய வேலை வாய்ப்பு அறிவிப்புகளை TCS நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு BCA மற்றும் B.Sc பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப பதிவுகளை செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 2ம் தேதி ஆகும். தேர்வுகள் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் நடத்தப்பட இருக்கிறது. இப்போது பணிக்கான தகுதி அளவுகோல் மற்றும் விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதி அளவுகோல்:
  • விண்ணப்பதாரர்கள் கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல், ஐடி அல்லது பி. வோக், CS IT பிரிவில் BCA அல்லது B.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • குறிப்பாக 2021-22 ஆண்டில் படிப்பை பூர்த்தி செய்யதிருக்க வேண்டும்.
  • மேலும் 10, 12 மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • வாய்மொழி திறன் – 30 நிமிடங்கள்
  • பகுத்தறிவு திறன் – 50 நிமிடங்கள்
  • எண் திறன் – 40 நிமிடங்கள்
விண்ணப்ப முறை:
  • TCS போர்ட்டலுக்குச் செல்லவும்.
  • TCS ஸ்மார்ட் பணியமர்த்தலுக்கு பதிவுசெய்து விண்ணப்பிக்கவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!