தமிழகத்தில் ரெம்டெசிவிர் முன்பதிவு செய்ய இணையதளம் – மருத்துவ பணிகள் கழகம் தொடக்கம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகமாக உள்ளதால் அதனை பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பணிகள் கழகம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் உச்சம் பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 33 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 300 க்கு அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை தாமதம்!!
மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்து தேவை உள்ள தனியார் மருத்துவமனைகள் tnmsc.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக நோய்யாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.