மத்திய உள்துறை செயலாளருக்கு ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு!
இந்தியாவில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் :
இந்தியாவின் உள் துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மத்திய எரிசக்தித் துறை செயலாளராக இருந்தவர். பின்னர் உள்துறை அமைச்சக சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார். இவர் கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு பல்லாவை நியமிக்க ஒப்புதல் அளித்தது. ராஜீவ் காபாவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் இயற்கை மரண உதவித்தொகை , ஈமச்சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு – அரசு அறிவிப்பு!
அப்போது, வரும் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இப்பதவியில் வகிப்பார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில் அஜய் குமார் பல்லா தொடர்ந்து தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். 60 வயதான இவர் இடையில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வில் இருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழுவானது, மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஓராண்டிற்கு மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகிப்பார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.