தமிழகத்தில் இயற்கை மரண உதவித்தொகை , ஈமச்சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு தமிழக அரசு சில உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
பழங்குடியினர் நலவாரியம்:
தமிழ்நாட்டில் இருக்கும் பழங்குடியின மக்கள் அனைவரது சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் மூலம் பழங்குடியினருக்கான நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படும். தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தில் சேர்ந்து அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மூலம் இந்த வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படும்.
தமிழக அரசு சார்பில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – குவியும் விண்ணப்பங்கள்!
பழங்குடியினர் நல வாரியம் கடந்த 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடிக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, மரணமடைந்தவரின் குடும்பத்திற்கான உதவி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் கிடைக்கிறது. தற்போது நலவாரியத்தின் உறுப்பினர்கள் மரணமைடைந்தால் உதவித்தொகையாக ரூ. 5,000 மற்றும் ஈமச்சடங்கிற்கு ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை மற்றும் ஈம சடங்கிற்கான நிதி போன்றவற்றை முறையே ரூ.20,000 மற்றும் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்குமாறு பழங்குடியினர் நலவாரியத்தின் உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக தமிழக அரசு பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.