ஜனவரி 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு, ஓமைக்ரான் தொற்று எதிரொலி – மாநில முதல்வர் உத்தரவு!
மேற்கு வங்க மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று பதிவு செய்யப்பட்டு வருவதால், அரசு ஜனவரி 15ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் மற்றும் வாகனங்கள் செல்வது தொடர்பான கட்டுப்பாடுகளை டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை தளர்த்தியும் அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஓமைக்ரான் பரவல் நிலைமையை மனதில் கொண்டு மேற்கு வங்க அரசு மாநிலத்தில் கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 15 வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் மற்றும் வாகனங்கள் செல்வது தொடர்பான கட்டுப்பாடுகளை டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை மாநில அரசு தளர்த்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த செவ்வாய் கிழமை முதல் ஓமைக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் அரசு ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று முதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் – சேவைகள் பாதிக்கும் அபாயம்!
அரசின் உத்தரவின்படி, அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் பார்கள் வழக்கமான செயல்பாட்டு நேரத்தின்படி திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. டிசம்பர் 24, 2021 முதல் ஜனவரி 1, 2022 பார்களை தாமதமாக மூடுவதற்கு விதிகளின்படி அனுமதிக்கப்படலாம். அபுதாபியிலிருந்து ஹைதராபாத் வழியாக மேற்கு வங்கத்திற்கு திரும்பியுள்ள 7 வயது சிறுவனுக்கு புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம், காவல் ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கூறப்பட்ட உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஓமைக்ரான் மாறுபாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் பரவல் மதிப்பாய்வு செய்த பின்னர், மேற்கு வங்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாநில செயற்குழு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளைத் தொடர பரிந்துரைத்துள்ளது. புதிய உத்தரவின்படி, கடை, வணிக வளாகம், நிகழ்ச்சி அல்லது கூட்டம் போன்றவற்றுக்குச் செல்லும் நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
புதிய வழிகாட்டுதல்கள்:
- மக்கள் மற்றும் வாகனங்களின் இயக்கம் உட்பட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டுப்படுத்தப்படும்.
- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை இரவு கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
- மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும், தகுந்த சமூக இடைவெளி மற்றும் சுகாதார நெறிமுறைகளை எப்போதும் பராமரிக்க வேண்டும்.
- அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் பார்கள் வழக்கமான செயல்பாட்டு நேரத்தின்படி திறந்திருக்கும்.
- டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை மதுக்கடைகளை தாமதமாக மூட அனுமதிக்கப்படும்.