தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு விரையும் மத்திய குழு – ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கை!
இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்று பரவியுள்ள மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு அந்த மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்க மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த குழு தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய குழு வருகை:
இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் அடியெடுத்து வைத்துள்ள உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் இதுவரை மஹாராஷ்டிரா 108, டெல்லி79, குஜராத் 43, தெலுங்கானா 38, கேரளா 37, தமிழகம் 34, கர்நாடகா 31, ராஜஸ்தான் 22 என மொத்தம் 415 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 115 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இதற்கிடையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உள்ளூர் அளவிலே கட்டுப்பாடுகளை விதித்துகொள்ளுமாறு மத்திய அரசு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. அதன்படி மத்திய பிரதேசம் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உத்திரபிரதேச மாநிலத்திலும் இரவுநேர ஊரடங்கு மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜன.3 முதல் தினசரி வகுப்புகள் – CEO ஆலோசனை கூட்டம்!
இந்நிலையில் ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மத்தியக் குழு தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஓமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் அடிப்படையில் மத்திய குழு ஆய்வு செய்து அவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளை தங்களது மாநிலங்களில் விதிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்க உள்ளது.