மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசுக்கு தொடரும் கோரிக்கை!
மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்த வேண்டும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவர்களுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது.
ஓய்வூதிய திட்டம்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2005ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு அமல் படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைக்கிறது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தின் மீது அரசு ஊழியர்களுக்கு அதிருப்தி இருந்து வருகின்றது. 2005 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் தான் அமலில் இருந்து வருகின்றது. மத்திய பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய பயன்பாடுகள்!
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ஜெய்வர்தன் சிங், போபாலில் செய்தியாளர்களிடம், காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தான் அமலில் இருந்து வருகின்றது. இதை போலவே, மத்திய பிரதேச மாநிலத்திலும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை, முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை மழை பெய்யும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இல்லையென்றால் வரும் சட்ட மன்ற தேர்தலில் அரசு ஊழியர்களுக்காக பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்துவது தான் முக்கிய கோரிக்கையாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநிலத்தின் வளர்ச்சியில் அரசு ஊழியர்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதனால் அவர்களின் கோரிக்கையை அரசு முன்னுரிமை கொடுத்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையின் மூலம் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.