அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதமும் பழைய ஊதியம் – நீடிக்கும் சிக்கல்!
தெலுங்கனா மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் புதிய ஊதிய அளவீடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கத்தை போலவே இம்மாதமும் அதாவது இதுவரை கொடுக்கப்பட்ட பழைய ஊதியத்தை பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊதிய உயர்வு
தெலுங்கனா அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் அரசு அறிவித்திருந்தது. அதற்கான ஊதிய அளவீடுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சில காரணங்களுக்காக ஊதிய உயர்வை தள்ளி வைத்திருந்த மாநில அரசு, ஊழியர்களுக்கான பழைய சம்பளத்தையே இதுவரை வழங்கி வந்தது. அந்த வகையில் அரசு ஊழியர்கள், இந்த மாதத்திற்கும் பழைய சம்பளத்தை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான மாநில அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சமூக வலைதள நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு – மத்திய அரசு அறிவுறுத்தல்!
அதாவது தற்போது திருத்தப்பட்ட சம்பள அளவீடுகளை ஆன்லைனில் பதிவேற்றும் மென்பொருளை புதுப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், புதிய சம்பளங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இது குறித்து மாநில அரசு எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், அனைத்து அரசு துறைகளும் பழைய சம்பள பில்களை கருவூலத் துறையில் சமர்ப்பிக்க துவங்கிய பின்னர் இந்த தகவல்கள் தெளிவாகியுள்ளது. பொதுவாக தெலுங்கனா அரசு துறைகள் தங்கள் ஊழியர்களின் சம்பள பில்களை ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவித்ததை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய அளவீடுகளை எதிர்பார்த்து வந்தனர். இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர், PCR கோப்பில் கையெழுத்திடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. பின்னர் GO வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் புதிய ஊதிய உயர்வு தள்ளிப்போனது. இருப்பினும், அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை ஜூலை 10ம் தேதி முதல் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.