அடுத்த 2 ஆண்டுகளில் 20,000 பெண்களுக்கு வேலை – ஓலா நிறுவன CEO உறுதி!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஓலா நிறுவனத்தின் பியூச்சர் பேக்டரியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20,000 பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று நிறுவனத்தின் இணை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பெண் ஊழியர்கள் நியமனம்:
இந்தியாவில் தற்போது பல்வேறு விதமான உலக நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது. பொதுவாக உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளிங் மற்றும் வடிவமைப்பு போன்ற துறைகளில் பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதில்லை. ஆனால் இந்த நிலை மாறி தற்போது அனைத்து விதமான தொழிற்சாலை மற்றும் உற்பத்தி பணிகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஓலா நிறுவனத்தின் பியூச்சர் பேக்டரியல் உற்பத்தி பிரிவில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் இணை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷவார் அகர்வால் அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிட்ட தொழிற்சாலையில் 20,000 பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் காலாண்டு விடுமுறை – அட்டவணை வெளியீடு!
மேலும் நிறுவனத்தின் முக்கிய துறைகளில் பெண் அதிகாரிகள் நிர்வாகம் மற்றும் தலைமை பொறுப்புகளை வகிப்பதாகவும் பெருமிதம் அடைந்துள்ளார். இதே போல் நாட்டின் பல்வேறு உற்பத்தி தொழிற்சாலைகளிலும் பெண் ஊழியர்கள் குறிப்பிட்ட சதவீத அளவில் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.