தமிழகத்தில் செவிலியர் & மருத்துவர் காலிப்பணியிடங்கள் – மே 19 நேர்காணல்!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர்கள், மருத்துவர்கள் பணியிடங்களை மாவட்ட அரசே நிரப்பி கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து புதுக்கோட்டையில் மே 19 ஆம் தேதி நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர், மருத்துவர் பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஒரே நாளில் 33 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமல் நிரம்பி வழிகின்றன.
4 மாவட்டங்களில் 3 மடங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாநில அரசு உத்தரவு!!
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு, மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப மாவட்ட அரசே ஏற்பாடு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மே 19-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் நேர்காணல் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, தற்காலிமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மருத்துவர்களுக்கு காலை 10 மணிக்கும், செவிலியர்களுக்கு பகல் 2 மணிக்கும் நேர்காணல் நடைபெறும்.மேலும் மருத்துவர்களுக்கு ரூ.60,000 மற்றும் செவிலியர்களுக்கு ரூ.14,000 சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tallent person ,and experience staff ku Oru nalla opportunity pls utilities the great 👼 nurses