தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறப்பு, LKG & UKG மாணவர் சேர்க்கைக்கு அனுமதி – அரசின் அறிவிப்புகள்!

0
தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறப்பு, LKG & UKG மாணவர் சேர்க்கைக்கு அனுமதி - அரசின் அறிவிப்புகள்!
தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறப்பு, LKG & UKG மாணவர் சேர்க்கைக்கு அனுமதி - அரசின் அறிவிப்புகள்!
தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறப்பு, LKG & UKG மாணவர் சேர்க்கைக்கு அனுமதி – அரசின் அறிவிப்புகள்!

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நரசரி பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவா் சேர்கை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற இருப்பதால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளையும் திறக்க அனுமதி வழங்க கோரி நர்சரி பள்ளி உரிமையாளர்கள் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மாநிலத்தில் 34 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிப்பு – பட்டியல் வெளியீடு!

இந்த நிலையில் அரசு இந்தாண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவா் சேர்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவுகளை அதிகரிக்கும் நோக்கில் மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதனால் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளும் விரைவில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ளது.

சென்னையின் இப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு! கனமழை எதிரொலி!

அதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதே போல அரசு நர்சரி பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பாதிப்புள்ள பகுதிகளில் நர்சரி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!