அதிரடி உத்தரவு.. 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிப்பு!
நாட்டில் பல்வேறு நகரங்களில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மற்றொரு நகரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதில் குறிப்பாக டெல்லியில் நோய்டா நகரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல்கள் உண்டாகிறது.
அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதியில் இருக்கும் பள்ளிகள் அனைத்திற்கும் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கவுதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
Exams Daily Mobile App Download
இந்த விடுமுறையானது எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று பனிப்பொழிவு காரணமாக லக்னோ மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31ம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணி முதல் 3 மணி வரை செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.