தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பிப்ரவரி 19ம் தேதி விடுமுறை கிடையாது – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பிப்ரவரி 19ம் தேதி விடுமுறை கிடையாது - அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பிப்ரவரி 19ம் தேதி விடுமுறை கிடையாது - அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பிப்ரவரி 19ம் தேதி விடுமுறை கிடையாது – அரசு அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு பொது விடுமுறை பொருந்தாது என்று அரசு தெரிவித்துள்ளது.

பொது விடுமுறை:

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 உறுப்பினர்கள், 138 நகராட்சிகளில் உள்ள 3,843 உறுப்பினர்கள், 490 பேரூராட்சிகளில் உள்ள 7,621 உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனவரி 28ம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. பிப்ரவரி 4ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த வாரம் அனைத்து வார்டுகளுக்குமான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

மேலும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள்!

தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு பிப்ரவரி 19ம் தேதி அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 22ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!