முழு ஊரடங்கு இல்லை, முதல்வர் எடுத்த புதிய முடிவு – பொதுமக்கள் நிம்மதி!
தலைநகர் டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடித்தால் முழு ஊரடங்கு விதிக்கப்படாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.இதனால் மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலை பரவல் பாதிப்புகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நோய் தொற்று பரவல் அதிகாரிக்காமல் இருப்பதற்காக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது நாட்டில் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை பரவல் அதிகரித்து வருகிறது. இத்நல் பல மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா தனியாக வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!
இந்த வகை வைரஸ் தொற்று அதிக வேகத்தில் பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் அதிக நோய் பரவல் பரவுவதால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா விதிகளை பின்பற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஜன.10 முதல் 1 – 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை – அரசு அறிவிப்பு!
டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், கேளிக்கை பூங்காக்களை மூட வேண்டும். பேருந்துகள், மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் மாற்று நாட்களில் திறக்கப்பட வேண்டும். வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல். சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவைகள் மூடப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.