திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா தனியாக வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!
தமிழக சின்னத்திரை சீரியல் உலகில் அடுத்தடுத்து நடந்த திருமண கொண்டாட்டங்களில் முக்கியமான பிரபலங்கள் ஷபானா மற்றும் ஆர்யன். தற்போது ஷபானா தனது திருமணத்திற்கு பிறகு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செம்பருத்தி ஷபானா:
ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி சீரியலில் அறிமுகம் ஆன நடிகை ஷபானா அதன் பிறகு வேறு எந்த தொடரில் தோன்றாத நிலையிலும், மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டவர். ஒரே சீரியலில் இந்த அளவு பிரபலத்தை அவரே எதிர்பாக்கவில்லை என்று பலமுறை கூறியுள்ளார். செம்பருத்தி சீரியல் முடிந்த பின்னால் அவரை பல முன்னனி சேனல்களிலும் காணலாம் என்பது உறுதி என்று பலரும் கூறி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் ஷாபனாவிற்கு நடிகர் ஆர்யனுடன் திருமணம் நடந்தது.
ஜன.10 முதல் 1 – 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்த நட்சத்திர ஜோடிக்கு அவர்கள் காதல் செய்து வந்த சமயத்தில் இருந்தே அதிக ரசிகர்கள் இருந்து வந்தனர். இதனால் இவர்களின் திருமணத்தை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வந்தனர். திருமணத்தை முடித்த கையோடு இவர்களை சுற்றி வதந்திகள் அதிகமாக பரவி வந்தது. ஆனால் அதை பற்றி எதுவும் கவலை இல்லாமல் இவர்கள் தங்கள் வாழ்க்கையை ரசித்து வந்தனர். திருமணம் முடிந்த பிறகும் ஷபானா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.
TNPSC ரூ.56100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஷபானா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு முக்கிய நினைவூட்டல் ஒன்றை கொடுத்துள்ளார். தினமும் நமக்கு நாமே உறுதி மொழி எடுத்துக் கொள்வதன் அவசியத்தை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு நாம் செய்யும் போது நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும், நம் ஆழ்மனதில் இருந்து மாற்றம் உண்டாகும் என்றும் கூறியுள்ளார். இவரது திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு கருத்தை வலியுறுத்துவது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.