தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத் துறையில் காலியாக இருந்த பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செவிலியர்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா கால கட்டத்தில் மருத்துவத் துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருந்தன. அத்துடன் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.14,000 ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனால் தங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மருத்துவ துறையில் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை – இன்று முதல் ஜனவரி 14ம் தேதி வரை!!
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்புக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் செவிலியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டில் 40 நாட்களுக்குள் கொரோனா பரவல் அதிகரிக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் BF7 வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.