இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 30 வரை அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதனால் பஞ்சாப் மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நோய் பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் அந்தந்த மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதன்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் டெல்லி, ஜார்கண்ட், குஜராத் மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதே நேரம் தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநில அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுற்றறிக்கை வெளியீடு!!
அந்த வகையில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள் அரங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு அதிகமாக கலந்து கொள்ள கூடாது. வீதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் வரை கலந்து கொள்ளலாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்