டிகிரி முடித்தவரா? – தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தில் வேலை..!
தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தில் (NHPTC) புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Deputy General Manager பதவிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகவல்களையும் இப்பதில் கொடுத்துள்ளோம். இதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Handicapped Finance and Development Corporation (NHFDC) |
பணியின் பெயர் | Deputy General Manager |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NHFDC காலிப்பணியிடங்கள்:
NHPTC அறிவிப்பின் படி, Deputy General Manager பதவிக்கு என தற்போது ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
NHFDC கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / ICWA / Graduation / MBA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NHFDC அனுபவங்கள்:
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 12 வருட முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இதில் 8 ஆண்டுகள் Corporate Financing, Financial Policies, Financial Appraisal, Funds Management, Budget estimation and implementation, accounts, taxation போன்ற பிரிவில் Banking sector அல்லது Government financial institution களில் middle management level பதவியில் பணிபுரிந்திருப்பது அவசியமாகும்.
NHFDC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
NHFDC ஊதியம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
NHFDC தேர்வு முறை:
Written Exam
Skill Test
Interview
NHFDC விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NHFDC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை செய்து பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு தபால் மூலமாக 28.02.2022 அன்றுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.