பொறியியல் முடித்தவரா? – NHAI ஆணையத்தில் முக்கிய வேலைவாய்ப்பு..!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் General Manager (Technical) பதவிக்கு என்று 15 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Highways Authority of India (NHAI) |
பணியின் பெயர் | General Manager (Technical) |
பணியிடங்கள் | 15 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online & Offline |
NHAI காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் General Manager (Technical) பணிகளுக்கு என்று 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Civil Engineering பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
NHAI அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 9 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
தேசிய நெடுஞ்சாலை ஆணைய வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
NHAI ஊதிய விவரங்கள்:
பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.37400 முதல் ரூ.67000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் Grade Pay ரூ.8700 வழங்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
NHAI விண்ணப்பிக்கும் முறை:
இந்திய தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 17.03.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பித்த விண்ணப்பங்களை 01.04.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.