மீண்டும் புதிய வகை வைரஸ் – தமிழகத்தில் ஊரடங்கு அமலாகுமோ? வைரலாகும் தகவல்!
தமிழகத்தில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவி உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் நியோகோவ் குறித்து ஒரு சில தகவல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வைரலாகும் தகவல்:
தமிழகத்தில் கொரோனா, ஓமைக்ரான் பரவலை தொடர்ந்து நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா பரவி வருவதாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரஸ் மூலம் மீண்டும் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமோ? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த தகவல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த போது, நியோகோவ் என்ற புதிய வகை வைரஸ் பரவுவதாக தேவையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் பிப்.3 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு பிறப்பிப்பு!
டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறினார். தமிழகத்தில் 3வது அலையில் முதியவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர். மேலும் அடுத்த 2, 3 வாரங்களில் கொரோனா தொற்று குறைய தொடங்கும் என்பதால், பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது.
பிப்ரவரி 28 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி!
இந்த வகையில் கொரோனா இரண்டு தவணை தடுப்பூசியை ,பொதுமக்கள் போட்டு கொள்வது மிகுந்த பாதுகாப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 730 பேரில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கலாம். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பொதுமக்கள் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.