SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்று முதல் புதிய சேவை கட்டணம் அமல்!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி புதிய சேவை கட்டணத்தை இன்று (ஜூலை 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏடிஎம் மூலம் இலவசமாக பணம் எடுப்பதற்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ:
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வங்கி சேவை கட்டணத்தை திருத்தி புதிதாக அமல்படுத்தி உள்ளது. இவை அனைத்தும் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சேவை கட்டணம் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம். அதன்படி எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 4 முறை மட்டுமே ஏடிஎம் வாயிலாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ இலவசமாக பணம் எடுக்க இயலும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய காப்பீட்டு திட்டம் அமல்!
4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எஸ்பிஐ வங்கியை தவிர்த்து இதர வங்கி கிளைக்கும் இந்த கட்டணம் பொருந்தும். இதையடுத்து வாடிக்கையாளர்கள் இனி ஆண்டுக்கு 10 காசோலைகளை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு காசோலைக்கும் இன்று (ஜூலை 1) முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி புதிதாக காசோலை புத்தகம் வாங்கினால் ரூ.40 கட்டணம் வசூலிக்கும் முறை இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மூத்த குடிமக்களுக்கு இந்த காசோலை பயன்பாட்டுக்கு வரம்பு கிடையாது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து மற்ற வங்கி கிளைகளில் இருந்து வித்டிராவல் படிவம் மூலம் ரூ.25,000 வரை பணம் எடுக்கலாம். மற்ற கிளைகளில் இருந்து காசோலை மூலம் ரூ.1 லட்சம் வரை எடுக்க இயலும். மேலும் மூன்றாம் தரப்பு பணம் எடுக்கும் வரம்பு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. எனவே வாடிக்கையாளர்கள் புதிய கட்டண சேவைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
Vare Bad
No comments
Vare Bad